மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

சரியான நேரத்தில் விவரங்களுக்கான அணுகலை வழங்குவது, மற்றும் ஆபத்தான நிலையில் மற்றும்/அல்லது புகார்களுடன் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான குறைதீர்க்கும் செயல்முறையை செயல்படுத்துவது ஆகியவற்றுக்கான நமது கண்ணோட்டம்.

மகளிர் உதவி எண் பற்றி

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பிரச்சினையில் இருக்கின்ற பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக, மகளிர் உதவி எண் 181 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. காவல் துறை, ஒன் ஸ்டாப் மையம் (ஓ.எஸ்.சி), மருத்துவமனை போன்ற பொருத்தமான அதிகார அமைப்புக்குப் பரிந்துரைகளை அளிப்பதன் மூலமும், ஒரே ஒரு சீர்மை எண்ணின் வழியாக, மகளிர் தொடர்பான மாநிலம் முழுவதும் உள்ள திட்டங்கள், சேவைகளைப் பற்றிய விவரங்களை அளிப்பதன் மூலமும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடியான மற்றும் அவசர கால உதவியை வழங்கும் நோக்கத்துக்காக, மகளிர் உதவி எண்ணின் பொதுமைப்படுத்தல் திட்டம் உள்ளது.

தமிழ்நாட்டில் மகளிர் உதவி எண் (181 மகளிர் உதவி எண்), 10 டிசம்பர், 2018 அன்று, இந்த உதவி எண், குடும்பம், சமுதாயம், பணியிடம் போன்றவை உள்ளிட்ட தனியான அல்லது பொதுவிடங்கள் இரண்டிலும், வன்முறையை அல்லது வன்முறைக்கான மிரட்டலை எதிர்கொண்டு, துயரத்தில் இருக்கின்ற பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

181 மகளிர் உதவி எண் (மகளிர் உதவி எண்), வீட்டிலுள்ளவர்கள் அல்லது அந்தரங்கத் துணையால் செய்யப்படுபவை உள்ளிட்ட எந்த வகை வன்முறையிலும் பாதிக்கப்பட்டு, தப்பிப் பிழைத்த மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான 24-மணி நேர இரகசிய சேவையாகும். இந்த பல்நோக்கு அலைவரிசையானது, 181 ஐ டயல் செய்வதன் மூலம், மின்னஞ்சல் மற்றும் ஆன்லைன் உரையாடல் மூலம் கிடைக்கிறது. அனைத்து அழைப்புகளும் இலவசம் மற்றும் இரகசியமானது.

இந்த உதவி எண், வீட்டு வன்முறை, வன்கொடுமையின் வகைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான சட்டங்கள் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான அரசாங்கத் திட்டங்கள் போன்ற பெண்களுக்கு எதிரான பொதுவான வன்முறை வகைகள் பற்றிய பல்வேறு தேர்வுகளையும், விவரங்களையும் வழங்குகிறது. உறவுகளில் வன்முறையைத் தடுக்கவும், முடிவுக்குக் கொண்டு வரவும், ஆரோக்கியமான உறவுகளை ஊக்குவிக்கவும் இளைஞர்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக 181 மகளிர் உதவி எண், 181 ‘யூ’த் தூதர்கள் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

181 மகளிர் உதவி எண், பின்வருவனவற்றை வழங்குகின்ற இலக்குடன் செயல்படுகிறது
  • வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாகவும், அவசரகால உதவியையும் வழங்குதல்.
  • ஆதரவையும், விவரங்களையும் எதிர்நோக்குகின்ற கட்டணமில்லாத 24 மணி நேர தொடர்பு மையம் பெண்களுக்காக சேவையாற்றுகிறது.
  • காவல் துறை/மருத்துவமனைகள்/ஆம்புலன்ஸ் சேவைகள்/மாவட்ட சேவை அதிகாரி (டி.எல்.எஸ்.ஏ) சமூக நலத்துறை அலுவலகம் மற்றும் ஆதரவு நிறுவனங்கள்/ ஒன் ஸ்டாப் மையம் (ஓ.எஸ்.சி), போன்ற பொருத்தமான முகமைகளுக்குப் பரிந்துரைகளை அளிப்பதன் மூலமும், நெருக்கடி மற்றும் நெருக்கடியற்ற தலையீடுகளை வழங்குகிறது.
  • வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு,அவர் வசிக்கின்ற அல்லது வேலை செய்கின்ற உள்ளூர் பகுதிக்குள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், கிடைக்கின்ற பொருத்தமான ஆதரவு சேவைகள், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை வழங்குதல், (ஆதாரம்: எம்.டபிள்யூ.சி.டி -இன் வழிகாட்டுதல்கள், மகளிர் உதவி எண் திட்டத்தைப் பொதுமைப்படுத்தல்)

சிறப்பான-பயிற்சி அளிக்கப்பட்ட வல்லுநர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரகசியமான
மற்றும் பரிவான ஆதரவு, விவரங்கள் மற்றும் பரிந்துரை சேவைகளை வழங்குகிறார்கள்.

எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளும் போது என்ன எதிர்பார்க்கலாம்?

பிரத்தியேக சேவை

181 மகளிர் உதவி எண்ணுக்கு அழைக்க விரும்புகின்ற, ஆனால் காது கேளாமை அல்லது காது கேட்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு, விளக்கிக் கூறுவதற்காக சைகை மொழியை அறிந்துள்ள, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆலோசகர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த ஆலோசகர்கள், 181 ஆதரவு சேவை தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக, நேரலை உரையாடல் வழியாக 24/7 இருக்கிறார்கள்.

இப்போது உதவி தேவையா? இப்போது உதவி தேவையா? சப்ஜெக்ட் களத்தில் பிரத்தியேக சேவை எனக் குறிப்பிட்டு, உங்கள் பெயர், தொலைபேசி எண்னை (வீடியோ-வசதி கொண்டது) எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். திரும்ப அழைப்பதற்காக காது கேளாமை கொண்ட எங்கள் ஆலோசகர்கள் 24/7 காத்திருக்கிறார்கள்.

ஒப்புதல் மற்றும் நன்னெறிகள்

தொடர்பு மையத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் செயல்பாட்டில் எங்கள் விழுமியங்களைத் தழுவி, பின்பற்றுவதை உறுதி செய்கின்ற வகையில், 181 மகளிர் உதவி எண் கட்டமைப்பு, செயல்களில் எங்கள் விழுமியங்களைத் தழுவிப் பின்பற்றுகிறது. 181 மகளிர் உதவி எண்ணைத் தொடர்பு கொள்கின்ற ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, எங்கள் பணியில் மிக உயர்ந்த நன்னெறித் தரங்களை நிலைநிறுத்தவதற்கு நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.

எங்கள் ஒப்புதல் மற்றும் நன்னெறிகளை விதிகளில் அடங்கியவை:

நம்பிக்கை

பரஸ்பர மரியாதை

சட்டத்தைக் கடைப்பிடித்தல்

பொறுப்புடைமை

உங்களுக்கு மரியாதைக்குரிய உறவுக்கான தகுதி உண்டு. நீங்கள் பேச விரும்பினால் இதோ நாங்கள் இருக்கிறோம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.